ஆரைக்கீரை – ARAIKKIRAI

 


ஆரைக்கீரை – ARAIKKIRAI

வேறுபெயர் – சதுப்பன்னி, நீர் ஆரை

தாவரவியல் பெயர் - MARSILEA QUADRIFOLIA

     இது நீர் தங்கிய இடங்களில் பயிராகும் நான்கு இதழ்கள் இலை உள்ளது இலைக் காம்பு நீண்டு இருக்கும், ( இது போல் தரைப் பகுதியில் வளரக்கூடிய ஆரைக்கீரை இதே உருவத்தில் இருக்கும் அது புளிப்புச் சுவை இருக்கும் அதை புளியாரை என்பர். இது தாம்பரத்தை சுத்தி செய்யவும் பற்பம் செய்யவும் பயன் படும் இது பற்றி அதன் தலைப்பில் அடுத்து விவரிப்போம். )

சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல் – குளிர்ச்சியுண்டாக்கி – REFRIGERANT

மருத்துவ குணம் – இது பித்தநோய், அதிமூத்திரம் இரத்தபிரமேகம், ஆகியவைகளைப் போக்கும்.

தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்

பொன்றாத நீரழிவைப் புண்நீரை – யொன்றுமிந்த

வூராசைச் சாராம லோட்டிவிடு நாலிதழார்

நீராரைக் கீரையது நீ

----அகத்தியர் குணவாகடம்

மருத்துவ செயல் – இதைச் சமைத்துண்ண மேற்கண்ட ரோகங்களைத் தீர்க்கும் நாவிற்கு உருசியைத்தரும்

இதை நிழலில் உலர்த்திக் கஷாயம் செய்து அதில் பால் சருக்கரை சேர்த்து உட்கொண்டு வரலாம்.   

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி