ஆ - வரிசை ஆலமரம்
ஆலமரம் – ALAMARAM
வேறுபெயர் – இயக்குரோதம், காமரம், கோளி,
தொல்மரம், பழுமரம், பூதம், வடம், வானோங்கி.
தாவரவியல் பெயர் - Ficus
Bengalensis
ஆங்கிலப் பெயர் - The Banyan tree
இம்மரமானது இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும்
சர்வ சாதரணமாக இருக்கக் கூடியது.
மருத்துவ உபயோக
பகுதி – இலை, பழம், விழுது, பால், பூ
சுவை – துவர்ப்பு,
வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.
செயல் –
துவர்ப்பி -
ASTRINGENT
உரமாக்கி -
TONIC
காமம் பெருக்கி - APHRODISIAC
சமூலம் – குணம் –
இதன் சமூலத்துக்கு மேகம் வயிற்றுக் கடுப்பு, நீரழிவு, இவைகளைப் போக்கும்
சக்தியுண்டு.
சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்கடுப்பைக்
கொல்லுகின்ற நீரளிவைக் கொள்ளுங்காண் – நல்லாலின்
பாலும் விழுதும் பழமும்விதை யும்பூவும்
மேலும் இலையுமென விள்.
அகத்தியர் குணவாகடம்
ஆலம்பால் :--
செயல்
– துவர்ப்பி – Astringent
சுவை – துவர்ப்பு,
வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.
குணம் – மேகத்தைப்
போக்கும் அசைகின்ற பல்லை இருக்கும் தலைக்குக் குளிர்ச்சியைத் தரும் சுக்கிலத்தை
விருத்தி செய்யும்.
ஆலம்பால் மேக மறுத்தசையும் பல்லிறுக்குமங்
கோல முடிக்குக் குளிர்ச்சிதரும் – ஞாலமதில்
மெத்தவுமே சுக்கிலத்தை விருத்திசெய்யும் தப்பாமற்
சுத்த மதிமுகத்தாய் ! சொல்
அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் –
நாக்கு வெடிப்பு, பிரமேகம் தாது நட்டம் இவைகளுக்கு உள்ளுக்கும்; பல் ஆட்டம்,கால்
வெடிப்பு இவைகளுக்கு மேலுக்கும் உபயோகிக்கலாம் .விழுதைக் கொண்டு பல்துலக்கப் பல்லிறுகும் வயிற்று
உளைச்சலைப் போக்கும்.
“ஆலும் வேலும் பல்லுக் குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி “
பழமொழி
இதைச் சுட்டுச் சாம்பலாக்கி, நல்லெண்ணையில்
கலந்து கரப்பானுக்குப் பூசக் குணமாகும். ஆலம்பழுப்பிலையை அரிசிப் பொரியோடு
சேர்த்துக் கஷயமிட்டுக் கொடுக்க அதிவேர்வையை உண்டாக்கும்.
ஆலம் விதை –
செயல் –
உரமாக்கி --------------
tonic
மலமிளக்கி -----------
laxative
மருத்துவகுணம் –
இதைக் கஷயமிட்டு வாய் கொப்புளித்துவர
வாய்ப்புண் வாய் நாற்றம் நாவேடிப்பு ஈறுப்புண், இவைபோம் விரனங்களைக் கழுவவும் இதை
உபயோகப்படுத்தலாம்.
பட்டையை இடித்து பத்து மடங்கு ஜலம்விட்டு
நாராக ஊறவைத்து எடுத்துக் கஷாயத்தை உள்ளுக்குக் கொடுத்துவர மதுமேகம் நீங்கும்.
ஆல்வேர்ப்பட்டை –
மருத்துவகுணம் –
இதை முறைப்படிக் கஷயமிட்டுப் பாலுடன்
சேர்த்துக் கொடுக்க மேக வெள்ளை நீங்கும்
மேற்படிக் கஷயத்தைத் தனியாக
வெளிப்பிரயோகமாகவும் உபயோகிக்கலாம்.
ஆலிலை –
மருத்துவ குணம் –
இலையை வதக்கி மேகக்கட்டிகளுக்கு வைத்துக்
கட்டலாம். இதனால் கட்டி உடைந்து சீழ் நீங்கும்
ஆலமொட்டு –
மருத்துவகுணம் –
இதைப் பால், சர்க்கரை முதலியவற்றோடு சேர்த்து
வயிற்று உளைவுக்கு கொடுக்க நீங்கும்
ஆலம்பழமும் –
வேர்க்கொழுந்தும் –
மருத்துவகுணம் –
இவை சுக்கிலத்தைப் பலப்படுத்தும்
ஆலங்குச்சி –



Comments
Post a Comment