இ - வரிசை இருவாட்சி
இருவாட்சி – IRUVATSHI வேறுபெயர் – அனங்கம், நவமல்லிகை, மயிலை, வசந்தி. Flore Multiplicata English – Arabian Jasmin Telungku – malle, malayaalam – mullachehapu, Kanadam – mallige, இந்தியா பர்மா,இலங்கை இவ்விடங்களில் அபரிமிதமாக பயிரிடப்படுகிறது. மருத்துவ உபயோகப்பகுதி – இலை, பூ, வேர், எண்ணெய். சுவை – கார்ப்பு, வீரியம் ௦௦ வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் பால்சுருக்கி – Lactifuge குணம் – நேத்திரப் பிரகாசம், தேகத்தில் நல்ல மனம் வனப்பு, இவைகளை உண்டாக்கும், தேககுத்தலும், மூர்ச்சை நோயும் நீங்கும். கண்ணொளிவும் மெய்யிற் கமல்மனமும் நீடழகும் நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் – பண்ணளியும் கங்குலும்வாழ் வார்குழலே ! காரமொடு வெப்புமிகத் தங்குமிகு வரட்சிமரத் தால் ----- அகத்தியர்குணவாகடம் மருத்துவகுணம் – இப்பூக்களில் இருந்து ஒருவித எண்ணெய் எடுக்கின்றனர், இவ்வெண்ணெய் காது, மூக்கு இவ்விடங்களில் உண்டாகும் சீழ்நாற்றம்களுக்கு உபயோகிக்கலாம். இதன் இலை,பூ, வேர் இவைகளை வெளிப்பிரயோகமாக உபயோகிக்கலாம். பால் சுரப்பை குறைக்கும். கண் நோய்களுக்கு இதன் இலையை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைய