அ - வரிசை - அறுகம்புல்
அறுகம்புல் – ARUGAM PUL வேறு பெயர் – மூதண்டம், அறுகு, பதம், தூர்வை, மேகரி . தாவரவியல் பெயர் – GYNODON DACTYLON இது எல்லா இடங்களிலும் வளரக் கூடியது சிறு கோடி வகுப்பு மருத்துவ பகுதி – இலை, வேர் சுவை – பணிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு. செயல் – வரட்சியகற்றி – EMOLLIENT துவர்ப்பி – ASTRINGENT சிறுநீர்ப் பெருக்கி – DIURETIC குருதிப் போக்கடக்கி – STYPTIC குணம் --- திரிதோடம், ஈளை (கோழை) கண்நோய், கண்புகைச்சல், தலை நோய், இரத்தபித்தம், மருந்துகளின் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும். பாடல் – அறுகம்புல் வாதபித்த ஐயமோ பீளை சிறுக அறுக்கும் இன்னுஞ் செப்ப – அறிவுதரும் கண்ணோயோடு தலைநோய் கண்புகைச்சல் ரத்தபித்தம் உண்நோய் யொழிக்கும் மருத்துவ குணம் – அருகம்புல்லின் சீத ஊரல் கியாழத்துடன் பாலுஞ்சேர்த்து உட் கொள்ள மூலரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்குப் பிழிய கண்ணோய், கண்புகைச்சல், மூக்கிலிட இரத்த பீனிசமும் காயப் பட்ட இடத்தில்