அ - வரிசை - அம்மையார் கூந்தல்
அம்மையார் கூந்தல் – AMMAIYAR KUNTHAAL
வேறுபெயர் – அவ்வையார் கூந்தல், குதிரை வாலி, முதியோர் கூந்தல், கிரியார்
கூந்தல், சரண்.
ஆங்கிலப்
பெயர் – CONVOLULUS
இது தென் இந்தியாவில்
சமவெளிகளில் தன்னிச்சையாக பயிராகிறது.
மருத்துவ
பகுதி – சமூலம்
சுவை – கைப்பு, வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு
செயல் –
துவர்ப்பி – ------ ASTRINGENT
உடற் தேற்றி
– ALTERATIVE
பசித்தூண்டி
---- STOMCHIC
குணம் – இதனால் மூலக் கடுப்பு, அதிசாரம், சுரவேகத்தாலுன்டான நாவரட்சி,
இடுப்புவாதம், பிரமேகம், இருமல், கட்டி படுவன், நேத்திர மங்கள், கோழை, அக்கினி
மந்தம் வாதகப தொந்தம், தினவு ஆகிய இவைகள் நீங்கும்.
பாடல் –
கடுப்பு கழிச்சல் கனன்ற சுரதாக
மிடுப்பு வலி வாத மிவற்றோ – டடுப்ப
விதிரை வா வென்றழைக்கு மேகமும் போகும்
குதிரை வாலிக்குக் குலைந்து
--- அகத்தியர் குணவாகடம்
காசம் பருப்படுவன் கண்மயக்க மீளை யொடு
வாசங் கமழ்குழலாய் ! மந்தமும் போம் – பேசத்
தரியாது வாதகபந்தானே சொறிபோம்
மிரியார் கூந்தற்கு விரைந்து
--- அகத்தியர் குணவாகடம்
முதியார் கூந்தளையரைத்து, இலநீரிர் கலக்கி குடிக்க மாறச்சுரமும் திரி
தோடமும் தீரும்.
பாடல் –
பிரிந்த விளநீறிர் பின் முதியோர்க் கூந்தல்
அறிந்ததனின் வேறை யாரைத்துச் – சொரிந்துன்ன
மாறாச் சுரமுடனே வாதபித்த சேத்துமமும்
கூறாகப் போகுங் குளிர்ந்து
--- தேரையர் குணவாகடம்
Comments
Post a Comment